ஆத்தாடி.. எவ்வளவு பெரிசு.. கோவிலுக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு.. வெலவெலத்துப்போன வாணியம்பாடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவிலுக்குள் நுழைந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்துள்ளது.

அதைக் கண்ட அக்கிராம மக்கள் மக்கள் பாம்பினை கோவிலில் இருந்து வெளியே அனுப்பி பின்னர் பாம்பு பிடிக்கும் இலியாஸ் என்ற இளைஞரை வரவழைத்துள்ளனர். அவரது உதவியோடு, நீண்ட நேரம் போராடி அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இந்த பாம்பு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.
Recommended Video
Chennai- க்கு வருகிறது Covaxin பரிசோதனை












Click it and Unblock the Notifications