பாட்டிலுக்கு பத்து ரூபாய்.. 10 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. குடிமகன்கள் அதிரடி கேள்வி
சென்னை: மது பாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற புகாரின் பேரில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 டாஸ்மாக் ஊழியர்களை நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாட்டிலுக்கு (பாட்டிலே திரும்ப பெரும் திட்டத்தின் கீழ் பத்து ரூபாய் தவிர்த்து கூடுதலாக பத்து ரூபாய்) பத்து ரூபாய் அதிகமாக வாங்குவது என்பது தமிழ்நாடு முழுக்கவே இருக்கிறது எனவே தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் தயாராக உள்ளதா என குடிமகன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாடு முழுக்கவே பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வுக்காக பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் அதைவிடவும் கூடுதலாக பத்து ரூபாய் எல்லா டாஸ்மாக் கடையிலும் வசூலிப்பதாக புகார்களை குடிமகன்கள் கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கையும் களவுமாக மாட்டும் ஊழியர்கள், மொபைல் போனில் சிக்கும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது . அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சில டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்படுவதும் நடக்கிறது. அப்படித்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னையின் புறநகர் பகுதிகளான நசரத்பேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம் மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த முறைகேடு நடப்பதாகத் தெரியவந்தது.
நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை
இந்த புகார்களைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய ரகசிய ஆய்வில் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது விற்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, விதிமீறலில் ஈடுபட்ட அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த 10 ஊழியர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
எச்சரிக்கை
"அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மற்ற டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் இதை பார்த்த குடிமகன்கள் பலர், தமிழ்நாடு முழுக்கவே பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் விலைக்கு விற்பது தொடர்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். அப்படித்தான் சஸ்பெண்ட் செய்வதாக இருந்தால் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டியது இருக்கும் என்று குடிமகன்கள் சவால் விடுத்துள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications