சென்னையில் குவிக்கப்படும் 10 ஆயிரம் போலீசார்.. இரவு நேர ஊரடங்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்!
சென்னை: சென்னையில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் ஊரடங்கு மிகவும் கெடுபிடியாக இருக்கும் என்றே தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தினமம் இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இரவு நேரத்தில் தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை, மருந்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு நேரத்தின் போது பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி வருபவர்கள்
சென்னையில் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் மீது குடம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள்
வணிக நிறுவனங்கள், வியாபாரம் செய்வோர் இரவு 10 மணிக்கு முன்பாக தங்களது வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடைகளை அடைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணி, மருத்துவ உதவிக் கோரி செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

10 ஆயிரம் போலீஸார்
இதற்காக சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா பரவல் அதிகமாக பரவுவதை தடுக்கவே இது போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள்
அது போல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications