தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. உங்கள் மாவட்டத்தில் எத்தனை?
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 1036 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1,89,995 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,87,400 பேராகும். அண்மைக்காலங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.
மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை பார்த்தோமேயானால் சென்னையில் இன்று ஒரே நாளில் 1036 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இன்று ஒரே நாளில் 1,359 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்கள்.
இன்று 17 பேர் உயிரிழந்தனர். அரியலூரில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 174 பேருக்கும், கோவையில் 319 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 130 பேருக்கும் நாமக்கல்லில் 117 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஹா சூப்பர் நியூஸ்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்வோரே அதிகம்!
சேலத்தில் 188 பேருக்கும் திருவள்ளூரில் 195 பேருக்கும், திருப்பூருக்கும் 166 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,89,995 பேருக்கும் கோவையில் 39818 பேருக்கும் செங்கல்பட்டில் 41164 பேருக்கும் கன்னியாகுமரியில் 14293 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.