Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10ம் வகுப்பு மாணவர்களே..நல்ல செய்தி.. வரும் 18ம் தேதி உங்கள் பள்ளியிலேயே கிடைக்க போகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது .

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017 , மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர்.

10th Class General Examination 2023: original mark certificate will be issued on Aug 18th

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதி வெளியானது. http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொண்டனர்.

மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பபியும் வைக்கப்பட்டன.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,35,614 (91.39%) பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவியர் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி அடைந்திருந்தனர். மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

தமிழ்நாட்டிலேயே 97.67 % தேர்ச்சி பெற்று, பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்தபடியாக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை - 97.53% பேரும், விருதுநகர் மாவட்டத்தில் - 96.22% பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.99% பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 95.58% பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

10th Class General Examination 2023: original mark certificate will be issued on Aug 18th

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிமுதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+