11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. அதிமுக ஆட்சி மீது தொங்கும் கத்தி.. 10 நாட்களில் தீர்ப்பு?
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த தீர்ப்பு 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக வரும் பட்சத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு இருக்கிறது.
சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கிய 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது அதிமுகவை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு ஆகும்.
இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதை பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

என்ன பின்னணி
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆட்சி அமைப்பதற்காக அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் அப்போது அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனியாக இருந்தனர். இரண்டு அணிகளாக அதிமுக அப்போது இருந்தது.

எதிராக வாக்கு
அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் எல்லோரும் அப்போதைய கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சபாநாயகர் இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை.

இல்லை
ஆனால் சில வாரங்களுக்கு பின் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த 18 இடங்களும் இன்னும் காலியாக உள்ளது. கொறடாவின் உத்தரவு சரிதான் என்று நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திமுக வழக்கு
இந்த நிலையில், 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினார். இதற்கு எதிராக டிடிவி தினகரனும், திமுகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதற்கு எதிரான வழக்கு மீது விசாரணை நடந்து முடிந்துள்ளது.

தீர்ப்பு எப்போது
இந்த வழக்கில்தான் இந்த வாரத்தில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த தீர்ப்பு 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக வரும் பட்சத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு இருக்கிறது. தமிழக சட்டசபையின் பலம் 235, இதில் தற்போது 21 எம்எல்ஏக்களின் இடம் காலியாக உள்ளது. இந்த தீர்ப்பிற்கு பின் சபையின் மொத்த பலம் 203 ஆக வாய்ப்புள்ளது (தீர்ப்பு ஒ.பி.எஸ்ஸுக்கு எதிராக வந்தால்).

என்ன வாய்ப்பு
இந்த நிலையில் அதிமுகவுடன் 104 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மை பலம் பெற 102 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் அதிமுகவில் 3 பேர் வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களால் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது என்கிறார்கள். லோக் சபா தேர்தல் வர உள்ள நிலையில் இந்த தீர்ப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications