சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 11141 கேஸ்கள்.. தமிழகத்தில் நிலை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக மஹாராஷ்டிரா, கேரளாவில் தினசரி கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

அதோடு தமிழகத்திலும் சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து வெளி நாடுகளில் இருந்து வரும் எல்லோருக்கும் இ - பாஸ் கட்டாயம் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.

இதேபோல் ஆந்திரா, புதுவை, கர்நாடக மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு இது பொருந்தும். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கிவிட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நிலவரம்

நிலவரம்

தற்போது நிலவரப்படி மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 11141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 22,19,727 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 20,68,044 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 52478 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,77,328 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,31,865 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4301 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,55,015 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,35,772 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12362 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,90,692 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,82,520 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7174 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,55,121 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,38,606 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12518 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

English summary
Fear of Second Wave : 11141 people affected by Coronavirus at Maharashtra in a single day .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X