12,000 கோடி குபீர்னு உயரும்.. 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர் என்ன தெரியுமா?
சென்னை: தமிழக அரசின் 8,000 ரூபாய் மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் களத்தில் பெரிய அளவில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.. ஒருபுறம் இது சாமானிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து சந்தையில் பணப்புழக்கத்தை உருவாக்கும் என்ற வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் இது போன்ற நேரடி மானியங்கள் மாநிலத்தின் நிதிநிலைமையை பாதிக்குமோ என்ற விமர்சனங்களும் எழுகின்றன.. இருப்பினும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதில் இந்தத் திட்டத்தை பலர் ஒரு கேம் சேஞ்சராகவே பார்க்கிறார்கள்..
தமிழக அரசின் 8,000 ரூபாய் மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொதுத்தளங்களில் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஒருபுறம் இது சாமானிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து சந்தையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் என்ற வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் இது போன்ற நேரடி மானிய முறைகள் நீண்டகால அடிப்படையில் மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிக்குமோ என்ற விமர்சனங்களையும் சில பொருளாதார வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.
8,000 ரூபாய் இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம்
இருந்தாலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்தத் திட்டம் ஒரு உடனடி தீர்வாக இருப்பதால், இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, இந்த கூப்பன் திட்டத்தின் பின்னணி குறித்து விரிவாக பேசினார்..
ப சிதம்பரம் கருத்து
தற்போதைய நிலையில் தமிழ்நாடு 9.8 சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்று குறிப்பிட்ட சிதம்பரம், தமிழ்நாடு மாடலை மற்ற மாநிலங்கள் பின்தொடர்வதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள இந்த 8,000 ரூபாய் கூப்பன் திட்டத்தை ஒரு 'சூப்பர் திட்டம்' என்று வர்ணித்த அவர், இது வெறும் இலவசம் அல்ல, மாறாக பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய காரணம் என்று விளக்கினார்.
பொருளாதாரத்தின் அடிப்படை விதியான பணப்புழக்கத்தை முன்வைத்து மூத்த தலைவர் சிதம்பரம் தொடர்ந்து பேசுகையில், மக்களுக்குப் பணமோ அல்லது கூப்பனோ கிடைக்கும்போது அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கிறது, பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான கடைகளில், விரும்பிய பிராண்டுகளை, தங்களுக்குத் தேவையான நேரத்தில் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் - வேலை வாய்ப்பு பெருகும்
இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்போது, தொழிற்சாலைகளில் உற்பத்தி உயரும்; உற்பத்தி அதிகரித்தால் இயல்பாகவே வேலைவாய்ப்புகள் பெருகும். வேலைவாய்ப்பு பெருகும்போது மக்களின் வருமானம் உயர்ந்து ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் குபீர் என மேலோங்கும்; இந்த மாற்றங்கள் எப்படி தொடரும் என்பதையும் அவர் விளக்கினார்..
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5,000 பேருக்கு இந்த கூப்பன் வழங்கப்பட்டால், அந்தப் பகுதியில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடக்கும். இந்தத் தொகையை மக்கள் உள்ளூர் கடைகளிலேயே செலவிடுவார்கள் என்பதால், அந்தந்த மாவட்டங்களின் பொருளாதாரம் வலிமை பெறும்..
தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை கோடி இல்லத்தரசிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படுவதால், மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 12,000 கோடி ரூபாய் புழக்கத்தில் இருக்கும்.
இத்தகைய பெரும் பணப்புழக்கம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தற்போதைய முதலிடத்திலிருந்து இன்னும் உயர்த்தும் என்றும், இந்த வளர்ச்சிப் பாதை தடையின்றித் தொடர தற்போதைய அரசு மீண்டும் ஐந்தாண்டுகள் தொடர வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தனது உரையில் வலியுறுத்தினார்.. மூத்த தலைவரின் இந்த கருத்து, பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.













Click it and Unblock the Notifications