14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. 6 பேர் அதிரடி டிரான்ஸ்ஃபர்.. தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும், 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பொன்ராமு பதவி உயர்த்தப்பட்டு சென்னை ரயில்வே எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பியான பி.ரவிசேகரன், சென்னை ஐ.ஜி. தலைமையகத்தில் எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
திருச்சி ஏ.எஸ்.பி.யான ஆசைத்தம்பி, திருப்பூர் நகர எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி.யான பி. முத்துக்கருப்பனுக்கு, பழனி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் காவல் துணை ஆணையராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் செவ்வூர் சிறப்புக் காவல் பட்டாலியன் எஸ்பி சந்திர சேகரன், கடல்சார் அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காவல் தலைமையகத்தின் துணை ஆணையர் கவுதம் கோயல், சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உளவுத்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி சுப்பாராஜூக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற சுப்பாராஜ், டிஜிபி அலுவலக நிர்வாக எஸ்பி, உதவி ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியில் ஏ.எஸ்.பி.யாக இருந்த வேலூர் மாவட்ட சேவூர் பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறுகிறார். தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு எஸ்பியாக முத்துகருப்பனும், ஆவடி ரெஜிமண்ட் மைய எஸ்பியாக ஜானகிராமனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல் ஆணையர் அலுவலக எஸ்பியாக மங்களேஸ்வரனும், சென்னை பயிற்சி கல்லூரி எஸ்பியாக சந்திரமவுலியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பியாக மாரிராஜனும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக மோகன் நவாஸும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் சென்னை எஸ்பியாக கெங்கைராஜும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி, 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதிகள்? 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்குமா? தமிழக முதல்வருக்கு கோரிக்கை -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications