சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

15 வயசு பிஞ்சு.. 3 மாதமாக ரூமில் அடைத்து.. திருத்தணியில் அட்டகாசம்.. ஆந்திராவுக்கு தப்பிய கொடூரன்

15 வயது சிறுமியை 3 மாதமாக பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: 15 வயசு சிறுமியை ரூமுக்குள்ளேயே அடைத்து வைத்து, 3 மாதமாக கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு காம பிசாசு.. அயனாவரத்தை சேர்ந்த இந்த சிறுமியின் சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தி!

சென்னை அயனாவரத்தை சேர்ந்த சிறுமி தன் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.. சிறுமிக்கு 15 வயசாகிறது.. ஆனால், சற்று மனநிலை சரியில்லை.. பாட்டி எதையாவது பேச, சிறுமி அவருடன் சண்டை போடுவது வழக்கம்.

15 year old girl sex abuse in tiruththani

கடந்த 20ம் தேதி, சிறுமிக்கும் பாட்டிக்கும் இப்படித்தான் தகராறு வெடிக்க, கோபித்து கொண்ட சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை.. ஆதரவில்லாமல் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே சுற்றி திரிந்துள்ளார்.

அப்போதுதான் வெங்கடேசன் என்பவர் சிறுமியை சந்தித்தார்.. வெங்கடேசன் திருத்தணியை சேர்ந்தவர்... விஷயத்தை தெரிந்து கொண்டார்.. சிறுமியின் மனநல பிரச்சனையையும் புரிந்து கொண்டார்.. அதனால் "நான் இருக்கிறேன், கவலைப்படாதே" என்று வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் வீட்டுக்கு போனதும், சிறுமியை தனி ரூமில் தள்ளிவிட்டு, கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த ரூமை விட்டு சிறுமியை வெளியே வர விடவே இல்லை.. இப்படியே 3 மாதமாக சிறுமியை அதே ரூமில் சீரழித்துள்ளார் வெங்கடேசன்.. இத்தனைக்கும் வெங்கடேசனின் அம்மா அந்த வீட்டில்தான் இருக்கிறார்.. மகனிடம் மல்லுக்கட்டியும் பிரயோஜனம் இல்லை.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர், சிறுமிக்கு உதவ முடிவெடுத்து, அதற்கான நேரத்திற்காக காத்திருந்தார்.

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

வேலை விஷயமாக வெங்கடேசன் வெளியேறி உள்ளார்.. அந்த நேரத்தை பயன்படுத்தி, சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இப்போது திரும்பவும் சிறுமி திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் சுற்றி திரிந்துள்ளார்.. அப்போது ரயில்வே போலீசார் பார்த்து, சிறுமியை மீட்டுள்ளனர்.

நடந்த சம்பவத்தை எல்லாம் விசாரித்து, அயனாவரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவலையும் சொன்னர்கள்.. வீட்டுக்கு வந்ததும் சிறுமி இல்லாததை கண்ட வெங்கடேசன், நடந்ததை புரிந்து கொண்டார்.. எப்படியும் போலீசார் வருவார்கள் என்று நினைத்து அங்கிருந்து தப்பிவிட்டார்.. ஆந்திராவுக்கு போய்விட்டாராம்.. அவரை கைது செய்யதான் போலீசாரும் ஆந்திரா சென்றுள்ளனர்.

இப்படித்தான் கடந்த ஆண்டு, ஜூலை மாதம் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சிறுமி கோபித்து கொண்டு வெளியே வந்து, கடைசியில் பாலியல் கும்பலிடம் மாட்டி கொண்டார்... கோபித்து கொண்டு வெளியே வரும் இதுபோன்ற சிறுமிகளை குறித்து வைத்தே ஒரு கும்பல் சுற்றி கொண்டிருக்கிறது.. தற்போது ஊரடங்கிலும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது அதிர்ச்சிக்குரியதாகி வருகிறது.. கடுமையான சட்டங்களே இப்போதைக்கு உடனடி தேவையாக உள்ளது!

English summary
15 year old chennai girl sex abuse for three months in tiruththani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X