புறநகர் மின்சார ரயிலை பயன்படுத்தும்.. சென்னை மக்களின் கனிவான கவனத்திற்கு! 17 ரயில்கள் ரத்து
சென்னை: சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை கணிசமான அளவுக்கு புறநகர் மின்சார ரயில்கள் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வடசென்னை மக்களை சென்னையுடன் இணைப்பதில் மின்சார ரயில்களின் பங்கு அளப்பரியது. திருவொற்றியூரில் இருந்து சென்னையின் மையத்திற்கு வர வேண்டும் எனில் மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று மெட்ரோ. இரண்டாவது புறநகர் மின்சார ரயில். மூன்றாவது பேருந்துகள். திருவொற்றியூர்தான் சென்னையின் தொடக்கம்.

மெட்ரோ ரயில்களின் கட்டணம் அதிகம் என்பதால் சாமானிய மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. அதேபோல பேருந்து மூலம் பயணிப்பது நேரத்தை அதிகமாக இழுக்கும். மெட்ரோ அளவுக்கு கட்டணம் இல்லை என்றாலும் கூட, பேருந்துகளிலும் கட்டணம் அதிகமாகத்தான் இருக்கிறது.
ஆனால் புறநகர் மின்சார ரயில் அப்படி கிடையாது. ரூ.5க்கு டிக்கெட் எடுத்தால், எண்ணூரில் இருந்து சென்ட்ரல் வரை பயணிக்கலாம். அதேபோல நேரமும் மிச்சமாகும். இடையில் சிக்னல் எதுவும் போடவில்லை எனில் 30-35 நிமிடத்தில் ரயில் சென்ட்ரல் வந்துவிடும். எனவே புறநகர் மின்சார ரயில் சாமானிய மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில்தான் இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, "கும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) பிற்பகல் 1.15 முதல் மாலை 5.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.15, நண்பகல் 12.10 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.
மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து பிற்பகல் 1, 2.30, 3.15,3.45, மாலை 5 மணிக்கும், சூலூர்பேட்டையிலிருந்து பிற்பகல் 1,1.15,3.10 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
அதேபோல், சனிக்கிழமை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 4.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்படும். சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை சென்ட்ரலிலிருந்து காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கும் பொன்னேரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக பொன்னேரியில் இருந்து பிற்பகல் 1.18, 2.48,3.33, மாலை 4.03, 5.18 மணிக்கு சென்ட்ரலுக்கும், மாலை 4.47 மணிக்கு கடற்கரைக்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு சென்ட்ரலுக்கும், சூலூர்பேட்டையிலிருந்து மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" என தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications