மறைமலை நகரில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார் என்ஜின்கள்.. போர்டு நிறுவனத்தின் திட்டம் என்ன?
சென்னை: சென்னையை அடுத்த மறைமலைநகரில் போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி செலவில் மீண்டும் உற்பத்தியை தொடங்க போகிறது. ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் மட்டும் தயாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 600 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முன்னதாக 2700 பேர் பணியாற்றி வந்தார்கள். முன்பு கார் முழுமையாக தயாரிக்கப்பட்டது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட ஆலையில் வெறும் என்ஜின் மட்டும் தான் தயாரிக்கப்பட உள்ளது. அதுவும் வெளிநாடு ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.
1990களில் பெங்களூர் பக்கம் ஐடி நிறுவனங்கள் படை எடுக்க, சென்னை பக்கம் அப்படியே ஹோண்டாய், போர்டு , டிவிஎஸ் உள்பட பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் படை எடுத்தன. பெங்களூர் ஐடி நகரமாகவும், சென்னை ஆட்டோ மொபைல் நகரமாகவும் மாற தொடங்கியது அந்த காலகட்டத்தில் தான்.

அந்த வகையில் சென்னை மறைமலை நகர் கீழக்கரணை கிராமத்தில் கடந்த 1990-ம் ஆண்டு போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த கார் ஆலை தான் இந்தியாவின் மிக பெரும் நிறுவனமாக இருந்து வந்தது. இங்கு 2 லட்சம் கார்கள் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் வரை தயாரிக்கப்பட்டு 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமார் 2,700 பேர் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வந்தார்கள். இந்த நிலையில் 2020 வாக்கில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்ததால், அந்த நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு மறைமலைநகரில் தனது உற்பத்தியை நிறுத்தியது.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நிறுவனத்தை மீண்டும் செயல்பட வைக்க பல்வேறு முயற்சிகளை செய்தார். கடந்த ஆண்டு, அமெரிக்கா சென்றபோது போர்டு நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேசி, தமிழகத்தில் இந்த நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும். அதற்காக தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த ஆலையை தொடங்க போர்டு நிறுவனம், ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இப்போது ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் மட்டும் தயாரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி செலவில் மீண்டும் செயல்பாட்டினை தொடங்குகிறது. அதற்கான ஒப்பந்தம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் இருக்கிறது. கர்நாடகா, தெலுங்கானாவின் பலம் ஐடி துறை என்றால், தமிழ்நாட்டின் பலம் உற்பத்தி சார்ந்த துறையில் வந்த முதலீடுகள் தான். உற்பத்தி துறையில் தமிழ்நாடு மிக வலுவாக இருக்கிறது. அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உற்பத்தி துறையில் கிடைக்கிறது. இதனால் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications