Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைமலை நகரில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார் என்ஜின்கள்.. போர்டு நிறுவனத்தின் திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த மறைமலைநகரில் போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி செலவில் மீண்டும் உற்பத்தியை தொடங்க போகிறது. ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் மட்டும் தயாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 600 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முன்னதாக 2700 பேர் பணியாற்றி வந்தார்கள். முன்பு கார் முழுமையாக தயாரிக்கப்பட்டது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட ஆலையில் வெறும் என்ஜின் மட்டும் தான் தயாரிக்கப்பட உள்ளது. அதுவும் வெளிநாடு ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.


1990களில் பெங்களூர் பக்கம் ஐடி நிறுவனங்கள் படை எடுக்க, சென்னை பக்கம் அப்படியே ஹோண்டாய், போர்டு , டிவிஎஸ் உள்பட பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் படை எடுத்தன. பெங்களூர் ஐடி நகரமாகவும், சென்னை ஆட்டோ மொபைல் நகரமாகவும் மாற தொடங்கியது அந்த காலகட்டத்தில் தான்.

2 5 lakh car engines per year in Maraimalai Nagar What is the Ford company s plan

அந்த வகையில் சென்னை மறைமலை நகர் கீழக்கரணை கிராமத்தில் கடந்த 1990-ம் ஆண்டு போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த கார் ஆலை தான் இந்தியாவின் மிக பெரும் நிறுவனமாக இருந்து வந்தது. இங்கு 2 லட்சம் கார்கள் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் வரை தயாரிக்கப்பட்டு 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமார் 2,700 பேர் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வந்தார்கள். இந்த நிலையில் 2020 வாக்கில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்ததால், அந்த நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு மறைமலைநகரில் தனது உற்பத்தியை நிறுத்தியது.

இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நிறுவனத்தை மீண்டும் செயல்பட வைக்க பல்வேறு முயற்சிகளை செய்தார். கடந்த ஆண்டு, அமெரிக்கா சென்றபோது போர்டு நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேசி, தமிழகத்தில் இந்த நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும். அதற்காக தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த ஆலையை தொடங்க போர்டு நிறுவனம், ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இப்போது ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் மட்டும் தயாரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி செலவில் மீண்டும் செயல்பாட்டினை தொடங்குகிறது. அதற்கான ஒப்பந்தம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் இருக்கிறது. கர்நாடகா, தெலுங்கானாவின் பலம் ஐடி துறை என்றால், தமிழ்நாட்டின் பலம் உற்பத்தி சார்ந்த துறையில் வந்த முதலீடுகள் தான். உற்பத்தி துறையில் தமிழ்நாடு மிக வலுவாக இருக்கிறது. அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உற்பத்தி துறையில் கிடைக்கிறது. இதனால் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+