"பிரிச்சி பாருங்க".. முதல் விதையை "அங்கிட்டு" தூவிய எடப்பாடி பழனிசாமி.. பாஜகவை விட, குஷியில் திமுக
சென்னை: சிறுபான்மை வாக்குகளுக்கு குறி வைத்திருக்கும், அதேசமயம், தென்மண்டலங்களிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனம் திரும்பியிருக்கிறது.
பாஜக கூட்டணியிலிருந்து இப்போது விலகியிருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் பலத்தை பெற்று தந்துகொண்டிருக்கிறது.. அதாவது, திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள், திமுக கூட்டணியில் இடம்பெற முடியாத நிலைமை கொண்ட கட்சிகள், எல்லாமே அதிமுகவுக்கு ஆதரவாக மாறி உள்ளதாக சொல்கிறார்கள்.

இஸ்லாமிய ஆதரவு: சில நாட்களுக்கு முன்பு, அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எப்படியும் இவர்கள் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. பிறகு, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பிறகு, எஸ்டிபிஐ கட்சியும் சந்தித்து ஆதரவு தெரிவித்தது.. பிறகு, ஹஜ் லைபர் சொசைட்டி, ஜனநாயக முஸ்லிம் மறு மலர்ச்சி கழகம் உள்ளிட்ட 6 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடியை சந்தித்தார்கள்.
அப்பாயிண்மென்ட்: இதுபோக, மேலும் சிறுசிறு அமைப்புகளும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.. சில அமைப்புகள் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு, அப்பாயிண்மென்ட் கேட்டுள்ளன. அதனால், கூட்டணி முறிவை, அறிவித்த இந்த குறுகிய நாட்களிலேயே சிறுபான்மையினரின் கவனம் அதிமுக பக்கம் திரும்பி இருப்பது கவனத்தை பெற்று வருகிறது. இந்த சிறுபான்மை அமைப்புகளை எல்லாம் ஒன்றிணைத்து, ஒரு சீட் ஒதுக்கவும் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.
அதேபோல, தென்மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் கவனம் திரும்பியிருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோரை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி நன்றாகவே உணர்ந்துள்ளாராம். அதனால், பாஜகவின் இந்த வியூகத்தையும் உடைக்கவும், தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள பிற சமூகத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
நாடார் வாக்குகள்: குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர், நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, இந்த 2 சமூகத்தை சேர்ந்தோருக்கு, கட்சிக்குள் முக்கிய பதவிகளை ஒதுக்க போவதாக சொன்னார்கள்.
அதாவது, நாடார், தேவேந்திர குல வேளாளர் சமூத்தை சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கும் வாய்ப்பும் உள்ளதாக, சில நாட்களுக்கு முன்பு நாம் பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அதற்கான முதல் விதையை தேனியில் தூவியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தேனி மேற்கு மாவட்டத்துக்கு புதிதாக அதிமுக நிர்வாகிகளை இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்... மாவட்ட அவை தலைவராக கணேசன், இணை செயலாளராக முத்துரத்தினம், துணை செயலாளர்களாக வீரமணி கர்ணன், சற்குணம், மாவட்ட பொருளாளராக, இளையநம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி: இதேபோல, எம்ஜிஆர் இளைஞர் அணி, வக்கீல் பிரிவு, சிறுபான்மை பிரிவு என பல்வேறு பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதற்கான அறிவிப்பை, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார்.. தென்மண்டலங்களில் எடப்பாடியின் குறி விழுந்துள்ளதை, ஓபிஎஸ், தினகரன் மட்டுமல்லாமல், பாஜகவும் சேர்ந்தே கவனித்து வருகிறது.
ஆனால், இந்த தென்மண்டலங்களில் வாக்கு சதவீதத்தை பெறுவதற்காகவும், தன்னுடைய செல்வாக்கை அதிகரித்து கொள்வதற்காகவும், எடப்பாடி பழனிசாமி பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்.. அதனால்தான், சட்டசபை உட்பட தனக்கு அடுத்தபடியான இடத்தை, ஆர்பி உதயகுமாருக்கு வழங்கி, நிறைய பதவிகளையும் ஒதுக்கினார்..
மாறுமா வாக்குகள்: அப்படியிருந்தும் எந்த பலனும் இந்த 2 வருட காலங்களில் கிடைக்காத காரணத்தினால்தான், மதுரை மாநாட்டையே, மதுரையில் நடத்தும் நிலைமைக்கு ஆளானார். அந்த மாநாடு ஓரளவு வெற்றியை தந்தது என்றாலும், முக்குலத்தோரின் ஆதரவு வாக்குகளாக மாறுமா என்று தெரியவில்லை. புதிய புதிய நிர்வாகிகளை நியமிக்க துவங்கி உள்ள நிலையில், அதிமுகவுக்கான பலம் தெற்கில் எப்படி இருக்க போகுதென்றும் தெரியவில்லை.
ஆனால், திமுகவோ எதற்கும் அசராமல் உள்ளது.. எக்காரணம் கொண்டும் சிறுபான்மை ஓட்டுக்களை தங்களிடமிருந்து பிரிக்கவே முடியாது என்ற பெருத்த நம்பிக்கை கொண்டுள்ளது.. அதுமட்டுமல்ல, ஒருபக்கம் எடப்பாடி, மறுபக்கம் பாஜக, ஓபிஎஸ், என இரண்டாக பிரிந்து தெற்கில் களமிறங்கினால், அது தங்களுக்குதான் பிளஸ் என்றும் திமுக கணக்கு போடுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications