சென்னை பயணிகள் கவனத்திற்கு.. தாம்பரம் - கடற்கரை இடையே இன்று முதல் 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை: தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்ரவரி 27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூர், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் கடந்த 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தாம்பரத்திலிருந்து, சென்னை கடற்கரைக்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் வழித்தடங்களில் 208 மின்சார ரயில்கள் இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்ட நிலையில், 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இரு மார்க்கத்திலும் 164 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதனால் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவசர தேவைக்காக செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு இடையே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அலுவலக நாட்கள் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. ரயில்கள் ரத்தால் பல்வேறு ரயில் நிலையங்களிலும், ரயில்கள் காலதாமதமாக வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்ரவரி 27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ஒரு மணி நேரத்தில் 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூர், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
லக்கேஜ் லிமிட் வந்தாச்சு.. தெற்கு ரயில்வே திடீர் கண்டிஷன்! பயணிகள் தெரியாமல் இதை செஞ்சா ஸ்பாட் ஃபைன் -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications