சென்னை பயணிகள் கவனத்திற்கு.. தாம்பரம் - கடற்கரை இடையே இன்று முதல் 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை: தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்ரவரி 27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூர், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் கடந்த 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தாம்பரத்திலிருந்து, சென்னை கடற்கரைக்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் வழித்தடங்களில் 208 மின்சார ரயில்கள் இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்ட நிலையில், 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இரு மார்க்கத்திலும் 164 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதனால் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவசர தேவைக்காக செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு இடையே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அலுவலக நாட்கள் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. ரயில்கள் ரத்தால் பல்வேறு ரயில் நிலையங்களிலும், ரயில்கள் காலதாமதமாக வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்ரவரி 27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ஒரு மணி நேரத்தில் 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூர், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications