223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை!
சென்னை: 17 வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 542 எம்.பி.க்களில் 223 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஏ.டி.ஆர் என்று அழைக்கப்படும் அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மக்களவைக்கு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முதல் தேர்வு செய்யப்பட எம்.பி.க்கள் வரை அவர்களின் கல்வி, வருமானம், குற்றப் பின்னணி போன்றவை குறித்து ஆராய்ந்து வந்தனர்.
இவர்களின் ஆய்வின் முடிவில் இப்போது தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 223 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மக்களவைக்குத் தேர்வான இரண்டில் ஒருவர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கொலை, பலாத்காரம்
159 பேர் மீது கொலை, கடத்தல், கற்பழிப்பு போன்ற கொடுங்குற்ற வழக்குகள் உள்ளன. இந்த குற்றவழக்குகளில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களில் 116 பேர் மீது வழக்குகள் உள்ளன, அதில் 87 பேர் மீது கொடுங்குற்ற வழக்குகள் உள்ளன. அதிலும் ஒருவர் மீது பயங்கரவாத வழக்கும் உள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 29 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன.

19 பேர் மீது கொடுங்குற்றங்கள்
அதில் கொடுங்குற்றங்கள் செய்தவர்கள் என்ற வழக்குகள் 19 பேர் மீது உள்ளன. திமுகவை சேர்ந்த எம்.பி.க்களில் 6 பேர் மீது கொடுங்குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 10 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன. 2009-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட எம்.பி.க்களில் 30% பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன அதில் 14% பேர் மீது கொடுங்குற்ற வழக்குகள் இருந்தன. இந்த சதவீதம் 2014-ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. அந்த மக்களவை தேர்தலில் 34 சதவீதம் மற்றும் 21 சதவீதம் என்று அதிகரித்தது. இவை தற்போது அதிகரித்துள்ளது. தற்போது 30 பேர் மீது கொலை வழக்குகளும், 19 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன.

கேரள எம்பிக்கள்
இந்த குற்ற வழக்குகளைப் பொறுத்த அளவில் மொத்த எம்.பி.க்களில் கேரளாவை சேர்ந்த 90 சதவிகித எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கேரளாவுக்கு அடுத்தபடியாக பிகாரில் 82% பேர் மீதும், தெலங்கானாவில் 52% பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிகப்படியான வழக்குகளை கொண்ட எம்.பி.க்கள் உள்ள மாநிலம் கேரளா என்று கூறும் இந்த அறிக்கை கூடுதலாக இன்னொரு தகவலையும் கூறுகிறது.

மோசமான கேரளா
அதாவது இடுக்கி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியகோஸ் என்பவர் மீது அதிகபட்சமாக 204 வழக்குகள் உள்ளன. இதில் 37 கொடுங்குற்றங்களும் அடங்கும். சில வழக்குகளில் இந்த எம்.பி தண்டனையும் அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது . குற்றங்களுக்காக இப்போது தேர்வு செய்யப்பட எம்.பி.க்களில் 10 எம்.பி.க்கள் தண்டிக்கப்பட்டவர்கள். இந்த பட்டியலில் பா.ஜ.க.வினர் 5 பேர், காங்கிரசார் 4 பேர், ஒருவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

பெரும் கோடீஸ்வரர்கள்
தேர்வு செய்யப்பட எம்.பி.க்களில் பாஜகவை சேர்ந்த 265 பேர் கோடீஸ்வரர்கள், காங்கிரசை சேர்ந்தவர்கள் 43 பேரும், திமுகவை சேர்ந்தவர்கள் 22 பேரும் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள்தான் உள்ளனர். மத்தியபிரதேசம் நகுல்நாத் என்பவருக்கு ரூ.660 கோடி சொத்து உள்ளது.

எச். வசந்தகுமார்
நமது மாநிலத்தை சேர்ந்த எச்.வசந்தகுமாருக்கு ரூ.417 கோடி அளவுக்கு சொத்து உள்ளது, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ரூ.338 கோடி மதிப்பில் சொத்து உள்ளது. கோடீஸ்வர எம்.பிக்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தல் தோறும் உயர்ந்தே வருகிறது. 2009-ம் ஆண்டில் 58% ஆக இருந்த கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 88% ஆக அதிகரித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications