23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 119 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு அதிகமாக உள்ளது. 23, 25, 32, வயதுடையவர்களும் கொரோனாவின் தீவிரத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 24 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், திருவண்ணாமலையில் 6 பேரும், தூத்துக்குடியில் 6 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர்.
கோவை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 5 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேர் இன்று பலியாகி உள்ளனர்.

4 மாவட்டங்களில் 2 பேர்
தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டையில் தலா 3 பேரும், திருப்பூர், விழுப்புரம், மதுரை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் இன்று கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், நீலகிரி, கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

32 வயது பெண் பலி
தமிழகத்தில் இன்று உயிரிழந்த பலரும் 50 வயதை கடந்தவர்கள் ஆவர். அரியலூரில் 32 வயதுடைய பெண் கொரோனாவின் தீவிரத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மதுரை மற்றும் தேனியில் 44வயது உடையவர்கள் பலியாகி உள்ளார்கள். கடலூரில் 25 வயது பெண் பலியாகி உள்ளார். விழுப்புரத்தில் 23 வயது ஆண் பலியாகி உள்ளார். சென்னையில் 40வயது நபர் பாதிப்பு உறுதியான இரண்டே நாளில் இறந்துள்ளார். 38 வயது பெண் கிருஷ்ணகிரியில் மூச்சு திணறலால் பலியாகி உள்ளார்.

மதுரையில் 278 பேர் மரணம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 2272 பேரும், செங்கல்பட்டில் 292 பேரும், மதுரையில் 278 பேரும், திருவள்ளூரில் 274 பேரும், காஞ்சிபுரத்தில் 142 பேரும், விருதுநகரில் 116 பேரும், கோவையில் 101 பேரும் இதுவரை பலியாகி உள்ளனர்.

தர்மபுரியில் குறைவு
தமிழகத்திலேயே மிக குறைந்த அளவாக நீலகிரி மாவட்டத்தில் 4 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். தர்மபுரியில் 7 பேரும், பெரம்பலூரில் 9 பேரும், கரூரில் 11 பேரும், நாகப்பட்டினத்தில் 11 பேரும், அரியலூரில் 11 பேரும் திருவாரூரில் 12 பேரும், ஈரோட்டில 14 பேரும் பலியாகி உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications