24 மணி நேரமும் விடாம சுத்துவாங்க.. தமிழக பெண்களுக்காக வந்த சிங்கப்பெண் படை.. வாட்ஸ்-அப் நம்பர் வருது
சென்னை: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" இன்று முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகத் தனது களப்பணியைத் தொடங்குகிறது. பெண்கள், சிங்கப்படையை தொடர்பு கொள்வதற்கு தனி வாட்ஸ்அப் குரூப்கள், செல்போன் நம்பர்கள் போன்றவையும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை மாநகரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் இந்த புதிய சிறப்புப் படையைத் தொடங்கி வைத்தார். பெண்களின் பாதுகாப்பிற்காக முற்றிலும் பெண் காவலர்களைக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த படை, இன்று புதன்கிழமை முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனது அதிரடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகிவிட்டது.

சிங்கப்பெண் படைகள் இன்று முதல்
பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் இந்த திட்டம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் 270 பிரிவுகளாக இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை விரிவுபடுத்தப்பட உள்ளது.
அதன் முதல்கட்டமாக, 70 சிங்கப்பெண் படைகள் இன்று முதல் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருகின்றன. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிங்கப்பெண் படை ஒதுக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளின் முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மிடுக்காக வலம் வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
தாம்பரம், ஆவடி எல்லைகள்
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, பெண்களுக்குப் பாதுகாப்புப் வளையத்தை பலப்படுத்தும் நோக்கில் 12 சிங்கப்பெண் படைகள் களமிறக்கப்பட்டு அதிரடி காட்டப் போகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக முக்கியப் பகுதிகளாகக் கருதப்படும் தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய போலீஸ் கமிஷனரக எல்லைகளில் தலா 4 சிங்கப்படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
இதுதவிர, தமிழகத்தில் உள்ள இதர போலீஸ் கமிஷனரகப் பகுதிகளில் தலா 2 சிங்கப்படைகள் வீதம் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளப் போகின்றன.
420 பெண் போலீசார்
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிங்கப்படையிலும் 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும், ஒரு பெண் போலீசாரும் முதற்கட்டமாக ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். இந்த பணிக்காக மாநிலம் முழுவதும் பிரத்யேகமாக 140 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தீவிரப் பரிசீலனைக்குப் பின் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து மொத்தம் 420 பெண் போலீசார் இந்த சிறப்புப் படையில் தங்களின் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த படையில் முழுக்க முழுக்க பெண் காவலர்கள் மட்டுமே களத்தில் நின்று பாதுகாப்புப் பணிகளைக் கவனிப்பார்கள் என்பது இதன் தனிச்சிறப்பாகும். அதே நேரத்தில், பெண் போலீசாருக்கு வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட சில குறிப்பிட்ட துணைப் பணிகளுக்காக மட்டும் ஆண் போலீசார் உதவிக்காக நியமிக்கப்பட உள்ளனர்.
வாட்ஸ்அப் குழுக்கள், போன் நம்பர்கள்
இந்த சிங்கப்பெண் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றக் கூடிய வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு இது பெரும் துணையாக இருக்கும்.
ஆபத்தில் இருக்கும் அல்லது பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த சிங்கப்படையைத் தங்களின் அவசரத் தேவைகளுக்கு மிக எளிதாகத் தொடர்பு கொள்வதற்காகத் தனி வாட்ஸ்-அப் குழுக்கள் மற்றும் பிரத்யேக செல்போன் எண்கள் ஆகியவை மிக விரைவில் காவல் துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை, அவசர உதவி தேவைப்படும் பெண்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள காவல் துறையின் அவசரக் கட்டுப்பாட்டு மைய எண்ணான 100-ஐ தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
319 அதிநவீன 4 சக்கர வாகனங்கள்
இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் எவ்வித தொய்வும் இன்றி மிகச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காகப் போக்குவரத்து வசதிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தீவிரப் பயன்பாட்டிற்காக மொத்தம் 319 அதிநவீன நான்கு சக்கர வாகனங்களும், 101 இருசக்கர வாகனங்களும் புதிதாகக் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இந்த வாகனங்கள் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பெண் போலீசார் ரோந்து சென்று, பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களைத் தவிடுபொடியாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பையும் பாதுகாப்பான உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது...!!
-
தேன்கனிக்கோட்டையில் நிலம் பிரச்சனை! கதறும் மக்களுக்காக கோதாவில் குதித்த ஹென்றி.. முதல்வருக்கு கடிதம் -
ஜெகதீஸ்வரி விட்ட டோஸ்.. ஆடிப்போன டாக்டர்ஸ்.. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் சபாஷ் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications