குட் நியூஸ்.. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு.. தமிழக அரசு அதிரடி
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை: தமிழகத்தில் அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது.. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. அதேபோல சில மாற்றங்களையும் செய்து வருகிறது.
அதில் ஒன்றுதான், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கார்டுகள்
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டுகள் வழங்க உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது... இது அப்பெண்களுக்கு ஏராளமான நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை கிடைக்கிறது. அதனை தொடர்ந்து அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...

அங்கன்வாடி
அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "அதன்படி அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளதுடன் மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிட்டுள்ளவாறு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகள்
அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அவர்கள் தனது கடிதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களில், ஆதரவற்ற விதவைகள், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

குட்நியூஸ்
இந்த அறிவிப்பானது ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வழி செய்யும் விதமாக உள்ளது.. ரேஷன் கார்டுகள் மூலம் சலுகைகளை பெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பானது திமுக அரசின் இந்த அறிவிப்பானது திமுக அரசுக்கு மேலும் நற்பெயரை பெற்று தரும்வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications