தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா.. பலி 39
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 39ஆக உள்ளது.
தமிழகத்தில், 3வது நாளாக தினசரி பாதிப்பு 2,500ஐ கடந்துள்ளது. மேலும், தமிழகத்தின், மொத்த கொரோனா பாதிப்பு 64,603 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் மேலும் 1380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பரிசோதனை அளவு என்பது குறைவுதான். 23,921 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 1227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை, 35,339 பேராகும். இன்று 11 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 28 பேர் அரசு மருத்துவமனைகளிலும் என மொத்தம் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 833 என்ற அளவில் உள்ளது.












Click it and Unblock the Notifications