சனாதன ஒழிப்பு.. அமைச்சர் உதயநிதிக்கு புதிய சிக்கல்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு போன பரபர கடிதம்
சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு என்பது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான புகார்களோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு 263 பேர் புகார் கடிதம் எழுதியுள்ளனர். இதனால் விரைவில் தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு என்ற பெயரில் மாநாடு நடந்தது.

இதில் உதயநிதி ஸ்டாலின், ‛‛ சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்காக எனது வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்'' என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் பாஜக முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு போலீஸ் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த விவகாரம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வரை சென்றுள்ளது. அதாவது உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்பட 262 பேர் கையெழுத்திட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு பரபரப்பான கடிதம் எழுதி உள்ளனர்.
மதவெறுப்பு பேச்சு விஷயத்தில் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதம் என்பது டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்என் திங்ரா மற்றும் முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து செயலாளர் கோபால கிருஷ்ண ஐஏஎஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் மொத்தம் 14 நீதிபதிகள், 130 ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்(20 பேர் தூதர்களாக இருந்தவர்கள்), 118 பேர் பாதுகாப்பு படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என மொத்தம் 262 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மதவெறுப்பு தொடர்பான விஷயத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது கவலையளிக்கும் வகையில் உள்ளது. மேலும் இந்தியா என்பது மதசார்பற்ற நாடு என்ற அடிப்படை கருத்துக்கு எதிரானதாக பேசி இருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு என்பது மதவெறுப்பு சார்ந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் உள்ளது. அதோடு தமிழகத்தை ஆட்சி செய்வோர் அவரது பேச்சை நியாயப்படுத்தி வருகின்றனர். இதனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக குறிப்பிட்ட ஒரு பிரச்சனை இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் நேரத்தில் அதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும். மேலும் சில நேரங்களில் ஏதேனும் பிரச்சனைகள் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பலர் கடிதம் எழுதியதும், அதன்பிறகு அந்த விவகாரம் பற்றி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இதனால் சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தாமாக முன்வந்து வழக்காக விசாரிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலை அறிய நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications