“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன்
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் சட்டம் - ஒழுங்கு விவாதம் வெடித்துள்ளது. "விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன" என்று குற்றஞ்சாட்டியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தூய அரசியல்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த விஜய் அரசின் முதல் 15 நாட்களிலேயே தமிழகத்தில் 266 குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான தொடர்ச்சியான பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், "இதுதானா மாற்றத்துக்கான ஆட்சி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன். விஜய் அரசு பொறுப்பேற்ற பின்னர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது, தான் ஒரு துாய சக்தி என்றும், மற்ற கட்சியினர் தீய சக்தி என்றும் பிரசாரம் செய்தார்.
தான் சாடிய தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், முதல்வர் பதவிக்கு வந்தார். அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களையும் திருட்டுத்தனமாக அரசியல் புரோக்கர்களை வைத்து, குதிரை பேரம் பேசி, சட்டசபையில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தன் பலத்தை நிரூபித்தார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டு, தன் கட்சியிலும் சேர்த்து கொண்டார். அந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடந்தால், மக்களின் வரிப்பணம் தானே வீணாகிறது என்று, முதல்வர் விஜய் அறியாமல் இருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
விஜய் ஆட்சிக்கு வந்த, 15 நாட்களில் தமிழகத்தில், 266 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில், 45 படுகொலைகள், 66 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 74 பாலியல் வன்கொடுமைகள், 82 ஊழல் குற்றங்கள் நடந்துள்ளன.
கடந்த இரு தினங்களிலேயே, திருவண்ணாமலையில், 14 வயது சிறுமி, கோவையில், 10 வயது சிறுமி, விழுப்புரம் வண்டிபாளையத்தில், 11 வயது சிறுமி, மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவி, நாகையில், 80 வயது மூதாட்டி ஆகியோர் கொடூர பாலியல் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்வரா முதல்வர்? என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ‘ஆபரேஷன் 12’.. நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? தவெக-வின் ரகசிய மூவ்! -
பெரிய மீனை இறக்கிய விஜய்.. லட்டு மாதிரி திமுகவிற்கு சாதகமான முடிவு.. ஸ்டன் ஆகி நின்ற தவெக! -
விவசாய கடன் 100% தள்ளுபடி.. விஜயின் மெகா அறிவிப்பில்.. இந்த முக்கிய விஷயத்தை கவனிச்சீங்களா -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
குதிரை பேரமா? அதெல்லாம் இல்லீங்க.. ஆதவ் அர்ஜுனா சொன்ன விளக்கம்! -
வந்தாச்சு முக்கிய அறிவிப்பு.. நாளை முதல் பரபரபாகும் கிளாம்பாக்கம் - பக்ரீத் சிறப்பு பேருந்துகள் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி












Click it and Unblock the Notifications