"அது" மட்டும் சீக்ரெட்.. அந்த "30 மணி நேரம்".. ஓபிஎஸ், சசிகலாவின் கானல் நீர்.. குபீர் குபேந்திரன்
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து பத்திரிகையாளர் குபேந்திரன ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: 30 மணி நேரம் ஜெயலலிதா இறந்த விஷயத்தை ஏன் மறைத்தனர்? என்ன நடந்திருக்கும் என்று யூகமான தகவல் ஒன்றை பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இவர்கள் 4 பேருக்கு மட்டும் ஏன் தொடர்பு? ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றோர் பெயர் அறிக்கையில் இல்லையே? 30 மணி நேரம் ஜெயலலிதா மரண செய்தி மறைக்கப்பட்டதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்..

ஸ்பெஷல்ஸ்
நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டியை குபேந்திரன் அளித்துள்ளார். அதில் அவர் சொன்னதாவது: "போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் கேமராவில் இருந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரி கேமராக்கள் வரை அத்தனையையும் அகற்றி உள்ளனர்.. உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தியின் உத்தரவில் பேரில்தான் கேமரா அகற்றப்பட்டதே தவிர, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேமரா அகற்றப்படவில்லை..

ஆணையம்
30 மணி நேரம் இறந்த நேரம் மறைக்கப்பட்டதாக ஆணையம் சொல்கிறது.. இந்த 30 மணி நேரம் எதற்காக என்றால், இவர்களின் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே.. 30 நேரம் எதற்காக என்றால், யார் அடுத்த முதல்வராவது? யாரை அமைச்சராக்குவது? இப்படி உள்ளடி வேலை அங்கே நிறைய நடந்திருக்கும்.. நடக்காமல் வாய்ப்பே இல்லை.. ஏன் என்றால், அறிக்கையில் உள்ளபடி, என்பார்மிங் செய்யப்பட்ட நேரத்தை வைத்து, சுதா சேஷையன் செய்த பதிவுதான் அது..

30
24 மணி நேரத்துக்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற தகவல் எப்படி கிடைக்கிறது? 4ம் தேதி பிற்பகலேயே ஜெயலலிதா இறந்துவிட்டார்.. உண்மை அதுதான்.. அந்த நேரத்தில் மாற்றுக்கருத்து கிடையாது.. 2016, டிசம்பர் 4ம் தேதி பிற்பகல், அப்போலோ மருத்துவமனையில் சென்று விசாரித்தால் தெரியும், அன்றைய தினம் முழுமையாக ஆஸ்பத்திரியில் வெளியேற்றம் நடந்தது.. நடக்க கூடாதது நடந்துவிட்டது என்று எல்லாருக்குமே தெரிந்துவிட்டது.. ஆனால் மறுநாள் சாயங்காலம் 4.30 மரணம் என்று அறிவித்தது இவர்களின் அரசியலுக்காகத்தான்..

கானல் நீர்
சசிகலாவுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய சிக்கல் இருக்கு.. ஒருவேளை ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குஅழைத்து சென்றிருந்தால், பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும், அதை தடுத்து விட்டாரே என்ற கோபம் சசிகலா மீது மக்களுக்கு நிச்சயம் எழும்.. அரசியல் பயணம் என்பது இனி அவருக்கு கானல் நீர்.. நடப்பது எல்லாம் தெரிந்து கொண்டு, தன்னுடைய முதல்வர் பதவிக்கு மட்டுமே ஓபிஎஸ் காத்து கொண்டிருந்தார் ஓபிஎஸ்.. இது அவருக்கு நெகட்டிவ் விஷயம்தான்.. அனைத்தையும் தெரிந்து கொண்டு, எடப்பாடி உட்பட அமைச்சர்கள் அமைதி காத்ததால், அனைவருக்குமே சிக்கல்தர்ன.. ஆகமொத்தம், இவர்களால் ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் அசிங்கம்.." என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications