சீன அதிபரின் நிகழ்ச்சி ஏற்பாடு, பாதுகாப்பு உங்க பொறுப்பு.. 34 சிறப்பு அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2000 வருட பந்தம்.. தமிழர் பெருமை.. சீன அதிபர் வருகைக்கு மகாபலிபுரத்தை தேர்வு செய்தது ஏன்?

    சென்னை: சீன அதிபரின் தமிழக விஜயத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும், விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி சென்னை விமான நிலையம் வழியாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தருகிறார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரத்தில் 12ம் தேதி வரை தங்கியிருக்கும் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்களை ஆலோசிக்க உள்ளார்.

    34 special officials alloted for China president visit to Tamilnadu

    இதையடுத்து, இரு முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகளை தமிழக அரசு கவனித்து வருகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கும் பிறகு, அங்கேயிருந்து மாமல்லபுரத்துக்கு சாலை வழியாக செல்ல உள்ளார்.

    இந்த வழித்தடங்களில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையொட்டி மொத்தம் 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

    இவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும், விழா ஏற்பாடுகளை கவனிப்பார்கள்.இதனிடேயே ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி, ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+