தமிழகத்தில் 35 டிஎஸ்பிக்கள் இட மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை காவல் உதவி ஆணையர்கள் உள்பட தமிழகத்தில் 35 போலீஸ் டிஜிபிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது பணியிடம் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் 35 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள்செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலையூர் காவல் உதவி ஆணையர் முருகேசன் அடையாறு காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் மோகன் கடலூர் திட்டக்குடி காவல் உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications