ஸ்பாவில் அந்த 35 நிமிடம்! எங்களையா எதிர்த்து பேசுற? கத்தி முனையில் கதறிய பெண்! அடுத்து நடந்த சம்பவம்
சென்னை: கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பாவில், 6 பேர் கொண்ட கும்பல் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 1ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கேள்விப்பட்டு கேரளாவே கொந்தளித்து கிடக்கிறது... என்ன நடந்தது அன்று??
கேரள மாநிலம் கொச்சியில் அந்த பிரபலமான ஆயுர்வேத ஸ்பா செயல்பட்டு வருகிறது.. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வாழ்வாதாரத்திற்காக அந்த ஸ்பாவில் வேலை பார்த்து வருகிறார்..

ஆயுர்வேத ஸ்பா
குடும்ப சூழலுக்காக பணிபுரியும் இடத்தில் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது... அதிலும், அந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம், அவர் சந்தித்த அந்த 35 நிமிட நரகத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது. அந்த 35 நிமிடம் என்ன நடந்தது?
சம்பவம் நடந்த அன்று, 6 பேர் கொண்ட கும்பல் ஸ்பாவிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.. அப்போது அங்கிருந்த இந்த பெண் ஊழியரிடம் 'கூண்டா வரி' வேண்டும் என்று கேட்டுள்ளது.
இங்கே பிசினஸ்
அதாவது "இங்கே பிசினஸ் செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் தர வேண்டும், இல்லையென்றால் யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டோம்" என்று கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பெண் ஊழியர், அந்த கும்பலை பார்த்து பயப்படாமல் தைரியமாக பேசியிருக்கிறார். "நாங்கள் நேர்மையாக உழைத்து சாப்பிடுபவர்கள், எங்களிடம் கொடுப்பதற்கு அவ்வளவு பணம் கிடையாது. இப்படி அராஜகம் செய்யாதீர்கள்" என்று பதிலடி தந்துள்ளார்.
தனி ரூமுக்குள் 35 நிமிடம்
இந்த பதில் அந்தக் கும்பலுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களையா எதிர்த்து பேசுகிறாய்? என்று கேட்ட அந்த கும்பல், அந்த பெண்ணை ஒரு தனி ரூமுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது.
அந்த சிறிய ரூமுக்குள் அந்த பெண்ணின் கழுத்தில் கூர்மையான கத்தியை வைத்து, "இப்போது சத்தம் போடு பார்ப்போம், உன் கழுத்தை அறுத்துவிடுவோம்" என்று மிரட்டியுள்ளனர். பிறகு அந்தக் கும்பலில் இருந்த 4 பேர் அடுத்தடுத்து அந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கத்தியின் நுனி கழுத்து சதையை அழுத்தி கொண்டிருந்ததால், அந்த பெண்ணால் உதவிக்குக் கூட யாரையும் அழைக்க முடியவில்லை... இறுதியில் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
கழுத்து சதையை அழுத்தி
மேற்கண்ட கொடுமைகள் 35 நிமிடங்கள் நடந்துள்ளன.. 35 நிமிடங்களும் அந்த கும்பலின் பிடியில் சிக்கி தவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.. ஆனாலும் அந்தப் பெண் உடைந்து போய்விடவில்லை. தனக்கு நேர்ந்த அநீதிக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்..
ஸ்பாவுக்கு வந்த 6 பேரின் துல்லியமான அடையாளங்களை தந்தார்.. அந்த 35 நிமிடங்கள், தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பயங்கர தருணங்கள் என்றும், அந்த பயத்தில், 35 நிமிடங்கள் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையை அனுபவித்ததாகவும், உயிர் போய் விடுமோ என்ற பயம் ஒவ்வொரு நொடியும் தனக்கு இருந்ததாகவும் அப்பெண் பதட்டம் விலகாமல் போலீசில் தெரிவித்துள்ளார்
இதையடுத்து அவர் அந்த அடையாளங்களை கொண்டு, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் முக்கியக் குற்றவாளியான அஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் ஐந்து பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கேரளா ஸ்பா
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இப்போது தீவிர மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உழைக்கும் பெண்ணின் தைரியமான பதிலுக்கு அந்தக் கும்பல் கொடுத்த இந்தத் தண்டனை, கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே இப்போது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
அத்துடன் வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை இந்த சம்பவம் நமக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டி உள்ளது..
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications