திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்?
சென்னை: அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு போக விரும்பாத கட்சிகள் கமல்ஹாசன் தலைமையில் 3-ஆவது அணி அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தலுக்கான அறிவிப்பு வரவுள்ளது. இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதில் அதிமுக கூட்டணி பேச்சு முடிந்துவிட்டது.

எத்தனை இடம்
அதிமுகவுடன் பாஜக, பாமக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் எழுந்துள்ளன. அதுபோல் புதிய நீதி கட்சிக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் அதிமுக கூட்டணியில் தலா ஓர் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.

எதிர்ப்பு
இந்த நிலையில் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையானது இழுபறியில் உள்ளது. இதில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு அதிமுகவின் தோழமை கட்சிகளான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கட்சி துவக்கம்
அது போல் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு பாமகவிலிருந்து சிலர் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக, திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் கட்சிகளும் உள்ளன. இன்று முதலாமாண்டு கட்சி துவக்க விழாவை கொண்டாடினார் கமல்ஹாசன்.

3-ஆவது அணி
அப்போது அவர் கூறுகையில் 3-ஆவது அணி நிச்சயம் அமையும் என கூறியுள்ளார். கமல் கூறிவரும் விஷயங்கள் மற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபடுகிறது. கிராம சபை கூட்டம், மக்களிடம் குறை கேட்பு கூட்டம் உள்ளிட்டவற்றை கமல் நடத்தி முடித்தார். விஜயகாந்த் போல் கமல்ஹாசனும் நிச்சயம் கணிசமான வாக்குகளை பெறுவார் என்ற நம்பிக்கை அவர் செல்லும் இடங்களில் கூடும் கூட்டங்களை பார்த்தாலே தெரிகிறது.

தேசிய அளவில் 3-ஆவது அணி
எனவே கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கமல்ஹாசன் தலைமையில் 3-ஆவது அணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேசிய அளவில் 3-ஆவது அணியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications