காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் 9 தொகுதிகளில்.. நான்கு இதுதானாம்!
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 4 தொகுதிகள் உறுதியாகி உள்ளன.
சென்னை: வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 தொகுதிகளை அக்கட்சிக்கு உறுதி செய்தது திமுக.
முதல்முதலாக காங்கிரசுடன் கூட்டணி என்று அறிவித்ததும், முதன்முதலாக 10 என்று சீட்டுகளை ஒதுக்கியதும் திமுகதான்!
அந்த வகையில் 10-ல் ஒன்று புதுச்சேரிக்கு போக, மீதம் 9 தொகுதியில் காங்கிரஸ் களம் காண போகிறது. கோஷ்டி பூசல்களை தாண்டி யாருக்கு என்ன சீட் காங்கிரஸ் தருமோ தெரியவில்லை.
ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கும்.. அதி வேக நேர்காணல்.. புதிய சாதனை படைத்த திமுக!
கேஎஸ் அழகிரி
இந்த 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதற்காக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவினர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று துரைமுருகன் தலைமையிலான திமுக குழுவினரை சந்தித்து பேசினார்கள்.
4 தொகுதிகள்
அப்போது சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது உறுதியானது. மிச்சம் உள்ள 5 தொகுதிகள் எவை என்பதற்கான பேச்சுவார்த்தை இனி நடைபெறும் என்றும் சொல்லப்பட்டது.
திமுக தனி லிஸ்ட்
அதாவது, தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, மயிலாடுதுறை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், திருவள்ளூர் என்ற இந்த 8 தொகுதிகளில் இருந்து, ஏதாவது 5 தொகுதிகளை தருமாறு காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் திமுகவோ மேற்கண்ட தொகுதிகள் குறித்து தனியாக ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்துள்ளது.
கரூர்?
அதனால் உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்பதால் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு அழகிரி கிளம்பி சென்றார். இந்தநிலையில், கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாம் என்ற ஒரு பேச்சு திமுகவில் எழுந்துள்ளதாக சூடான தகவல் ஒன்று வர ஆரம்பித்துள்ளது.