Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக காவல்துறையில் 44 டிஎஸ்பிகளுக்கு ஏடிஎஸ்பிகளாக பதவி உயர்வு.. பணியிடங்கள் ஒதுக்கி டிஜிபி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல்துறையில் டிஎஸ்பிக்களாக பணியாற்றி வந்த 44 பேருக்கு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

44 போலீஸ் டிஎஸ்பி-களுக்கு, ஏடிஎஸ்பி-யாக பதவி உயர்வு வழங்கி பணியிடங்களை ஒதுக்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி மதியழகன், ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

police shankar jiwal dsp

தீவிரவாத தடுப்பு பிரிவு டிஎஸ்பி நல்லதுரை, கடலூர் மாவட்டம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ 2 சிபிசிஐடி டிஎஸ்பி புருஷோத்தமன், சென்னை ஸ்பெஷல் டிவிஷன் சிபிசிஐடி ஏடிபிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை வடபழனி உதவி ஆணையர் அனந்தராமன், தாம்பரம் ஆணையரக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் ஒவ்வோர் ஆண்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 4 ஏ.டி.ஜி.பி-க்களுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதுதவிர ஒரு ஐ.ஜி-க்கு ஏடிஜிபி பதவி உயர்வும் 5 டிஐஜி-களுக்கு ஐஜி-யாக பதவி உயர்வும் 8 எஸ்பிக்களுக்கு டி.ஐ.ஜி பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+