வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி; தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ- 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை: தமிழகத்தின் வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி, தாம்பரம் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பயிற்சி ஏடிஜிபி தம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கண்ணன், ஆயுதப் படை ஐஜியாக மாற்றப்பட்டிருக்கிறார்.
மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனரான தேன்மொழி, வடக்கு மண்டல ஐஜியாகவும் மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை கமிஷனராக வி. பாலகிருஷ்ணன், திருநெல்வேலி கமிஷனராக அவினாஸ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட எஸ்.பி.யாக ஷிவ பிரசாத், திண்டுக்கல் எஸ்.பி. வி. பாஸ்கரன், நெல்லை எஸ்.பி.யாக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக பி. தங்கதுரை, திருவாரூர் எஸ்.பியாக பி.சி.கல்யாண், திருவண்ணமலை எஸ்.பி.யாக கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு காவல் பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக ஜெய கௌரி, மத்திய மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார், சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையராக விஜயகுமார் , கரூர் எஸ்.பி.யாக சுந்தரவதனம் , மதுரை எஸ்.பி.யாக சிவபிரசாத், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் ஆணையராக பவன் குமார் ரெட்டி, கடற்கரை பாதுகாப்பு எஸ்.பி.யாக சுந்தரவடிவேல், திருநெல்வேலி கிழக்கு துணை காவல் ஆணையராக எஸ்.பி. ஸ்ரீனிவாசன், திருவாரூர் எஸ்.பி.யாக சுரேஷ்குமார் , சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இடம் மாற்றம் செய்யப்பட்ட 44 ஐபிஎஸ் அதிகாரிகள் விவரங்கள்:












Click it and Unblock the Notifications