தமிழ்நாட்டில் இன்று 454 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... மேலும் 462 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 454 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
Recommended Video

தமிழகத்தில் தொடர்ந்து 50ஆவது நாளாக இன்றும், ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் 454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தற்போதுவரை மாநிலத்தில் 8,46,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலம் முழுவதும் 4,192 பேர் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா காரணமாக இன்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்த 462 பேர். இன்று மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இன்று மட்டும் 52,350 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தலைநகர் சென்னையில் இன்று 147 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 120 போர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications