Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த அக்காவையே.. பலாத்காரம் செய்த தம்பி.. அதுவும் பல வருடங்களாய்.. அள்ளிக் கொண்டு போன போலீஸ்

48 வயது அக்காவை பலாத்காரம் செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த அக்காவையே 20 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது.. இதை கட்டுப்படுத்த அரசும் காவல்துறையில் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும், அந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை.

வெளிநபர்களால் பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ள சூழலில், வீடுகளுக்குள்ளேயே வன்கொடுமைகள் நடந்து வருவது கலக்கத்தை தந்து வருகிறது. அப்படித்தான் சென்னை மயிலாப்பூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது..

கணவன்

கணவன்

கூடப்பிறந்த தம்பியே, அக்காவை மிரட்டி, பாலியல் வன்புணர்வு செய்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது... மயிலாப்பூரை சேர்ந்த அந்த சகோதரிக்கு 48 வயதாகிறது.. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.. ஆனால் திருமணமாகாதவர்.. இவருக்கு 40 வயதாகிறது.

 மயிலாப்பூர்

மயிலாப்பூர்

அக்காவும் தம்பியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், சொந்த அக்கா என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அடிக்கடி வன்புணர்வு செய்து வந்துள்ளார்.. இது பல வருடமாகவே இப்படித்தான் நடந்து வந்துள்ளதாக தெரிகிறது... ஒரு கட்டத்தில் தம்பியின் தொல்லை அதிகரித்ததால், அந்த பெண் மயிலாப்பூர் மகளிர் ஸ்டேஷனில், தம்பியால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் அளித்து கதறி அழுதுள்ளார். அந்த புகாரில் பெண் கூறியுள்ளதாவது:

அண்ணாமலை

அண்ணாமலை

"கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 20 வருடங்களாக தாயுடன் தனியே வசித்து வருகிறேன். அதே வீட்டில் திருமணமாகாத தம்பி அண்ணாமலை (40), வசித்து வருகிறார்... அவர் அடிக்கடி மதுபோதையில், என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 விசாரணை

விசாரணை

அதன் அடிப்படையில் போலீசாரும் விசாரணை நடத்தியதில், சொந்த அக்காவுக்கு தம்பி பல வருடம் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது உண்மை உறுதியானது.. இதையடுத்து அந்த நபர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்... சொந்த அக்கா என்றும் பாராமல், 48 வயதாகிறது என்றும் பாராமல், பாலியல் வன்கொடுமையில் தம்பி ஈடுபட்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+