ரூ 481 கோடியில் வடபழனி பேருந்து முனையம்! என்னென்ன வசதிகள்?
சென்னை: சென்னை வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாகத்துடன் கூடிய "வடபழனி பணிமனை வளர்ச்சித் திட்டம்" மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ 481 கோடியில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய வடபழனி பேருந்து பணிமனை வளர்ச்சி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரூ 481.3 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வடபழனி பேருந்து பணிமனை இடத்தில் உருவாக்கப்படும். இந்த வளர்ச்சி திட்டம், அதிக தேவை கொண்ட நகர்ப்புற மையத்தை உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு வசதி கொண்டதாக மாற்றுவதே நோக்கமாகும்.
12 மாடி
மொத்தம் 12 மாடி கொண்டது. தரை தளத்தில் நவீன பேருந்து நிலையம் அமைகிறது. அதில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகிறது. மொத்த கட்டுமானப் பரப்பளவு 1,06,762 சதுர மீட்டர்கள் ஆகும்.
பைக்குகள்
இரு அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட பைக்குகள், 214 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். முதல் தளத்திலிருந்து 10 ஆவது தளம் வரை அலுவலகங்களை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பயணிகள்
அதில் பெரு நிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள், அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைகிறது. பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு மையம், உணவகங்கள் 5ஆவது தளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
12 மாடிகள்
சிறிய விற்பனை நிலையங்களை கிரவுண்ட் ஃப்ளோரில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாடியில் பசுமையான தோட்டம், சூரிய ஒளி பேனல்கள் அமைக்கப்படுகின்றன. வடபழனி சென்னை மாநகரின் பரபரப்பான 32 பணிமனைகளில் ஒன்றாகும்.
12 ஆவது மாடியில் என்ன
11 மற்றும் 12-வது தளங்கள் குறிப்பாக AVGC - Animation, Visual Effects, Gaming, and Comics துறைக்காக நியமிக்கப்பட்டுள்ளன. பிராட்வே பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக பல அடுக்குகளாக கட்டப்பட இருக்கும் நிலையில், தற்போது வடபழனியிலும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ 823 கோடி
சென்னையில் பழமையான பிராட்வே பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 823 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
9 மாடிகள்
இந்த புனரமைப்பு பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள் முழுவதும் இடிக்கப்படுகின்றன. அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
பிராட்வேயில் 10 மாடிகள்
அது போல் பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படுகிறது. அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரயில்வே, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன. ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications