"குடியை விடு.. படிக்க விடு".. முதல்வர் இல்லம் நோக்கி 5 சிறுவர்கள் 30 கி.மீ. நடந்தே சென்று போராட்டம்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 5 சிறுவர்கள் முதல்வர் இல்லம் நோக்கி 30 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
Recommended Video
நாட்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட அரசுக்கு வருவாய் தரும் அனைத்து துறைகளும் மூடியே உள்ளது. இதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்த நிலையில் பொருளாதாரத்தை சீர்கேட்டை சமாளிக்க மாநிலங்கள் சில தளர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு அதிக வருவாயை கொடுக்கும் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு
சமூக வலைதளங்களிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு எழுந்துள்ளது. 45 நாட்களுக்கு குடிக்காமல் இருந்ததால் வீடுகளில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்தது, குற்றங்கள் குறைந்தன. இதனால் மதுப்பிரியர்களின் பிள்ளைகளும் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அரசு முனைப்பு
மேலும் கூலித் தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கு உணவில்லாததற்கு வருந்துவதை காட்டிலும் தங்கள் தந்தைமார்கள் குடிக்காமல் இருப்பதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் சென்னையை தவிர தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.

நடைப்பயணம்
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கை விடுத்து ஆகாஷ், விஷ்டோரியா, ஆதர்ஷ், சபரி, சுப்ரியா ஆகிய 5 சிறுவர்கள் முதல்வர் இல்லம் நோக்கி நடந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கேளம்பாக்கத்தை அடுத்துள்ள படூரில் இருந்து 30 கி.மீ. தூரம் வரை நடந்தே இந்த சிறுவர்கள் நடைப்பயண போராட்டத்தை தொடங்கினர்.

படிக்க விடு
அவர்கள் கையில் "குடியை விடு படிக்க விடு" என்ற பதாகைகளை ஏந்தி இருந்தனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது போல் முன்பும் மதுக்கடைகளை மூட வேண்டும் என குழந்தைகள் போராட்டம் நடத்திய சம்பவங்களும் நம் தமிழகத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications