ஸ்கூலுக்கு போகமாட்டேன் என அடம்பிடித்த 5 வயது சிறுமி.. பெற்றோருக்கு சந்தேகம்- சிக்கிய ‘கொடூர’ பியூன்!
சென்னை : சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி அந்தச் சிறுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் போயுள்ளது.
இதையடுத்து உடல்நிலை சீரான பின்பும் அந்தச் சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அந்த சிறுமி அந்தப் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனக் கூறி பயந்து அழுதுள்ளார்.

இதனால், ஏன் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம்பிடிக்கிறாய் என அந்தச் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் பியூனாக வேலை பார்க்கும் ராஜ் (38) என்பவர் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினரிடம் பெற்றோர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் சரிவர பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த பியூனான ராஜை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
விளாத்திகுளம் மாணவி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென் மண்டல ஐஜி விளக்கம்! -
3 மாத கர்ப்பிணி மனைவி தூங்கும் போது சுத்தியலால் அடித்து கொலை! தலைமறைவாக இருந்த காதல் கணவர் கைது! -
டீ போட்டு தராத மருமகளை போட்டுத்தள்ளிய மாமியார்.. அதுவும் எப்படி தெரியுமா.. ஆடிப்போன கேரளா -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி!











Click it and Unblock the Notifications