ஸ்கூலுக்கு போகமாட்டேன் என அடம்பிடித்த 5 வயது சிறுமி.. பெற்றோருக்கு சந்தேகம்- சிக்கிய ‘கொடூர’ பியூன்!
சென்னை : சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி அந்தச் சிறுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் போயுள்ளது.
இதையடுத்து உடல்நிலை சீரான பின்பும் அந்தச் சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அந்த சிறுமி அந்தப் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனக் கூறி பயந்து அழுதுள்ளார்.
இதனால், ஏன் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம்பிடிக்கிறாய் என அந்தச் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் பியூனாக வேலை பார்க்கும் ராஜ் (38) என்பவர் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினரிடம் பெற்றோர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் சரிவர பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த பியூனான ராஜை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
’காஸ்ட்ரேஷன்’ பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்! அதுவும் இந்த மாதிரியா? 'தாய்’ அதிரடி..!