உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.. க்யூட் ஓவியத்தோடு 5ம் வகுப்பு மாணவி கடிதம்.. தலைமை நீதிபதி நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவிற்கு கேரளாவை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி ஒருவர் எழுதிய கடிதம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் தற்போது ஓய்ந்துள்ளது. ஏப்ரலில் இருந்து மே மாதம் வரை இரண்டாம் அலை மிக மோசமாக தாக்கிய நிலையில், தற்போது கேஸ்கள் குறைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றம் மிகவும் சிறப்பாக கவனம் செலுத்தியது.

5-year-old girl student send a letter to CJI thanking SC intervention in Covid 19 issues

ஆக்சிஜன் ஒதுக்கீடு தொடங்கி வேக்சின் கொள்கை வரை பல விஷயங்களில் உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவுகள்தான் மத்திய அரசை துரிதமாக இயங்க வைத்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவிற்கு இதற்காக நன்றி தெரிவித்த கேரளாவை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி லிட்வினா ஜோசப் கடிதம் எழுதி உள்ளார்.

திருச்சூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவி லிட்வினா ஜோசப் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா தடுப்பு பணிகளிலும், மக்களின் உயிர்களை காப்பதிலும் உச்ச நீதிமன்றத்தின் பங்கை செய்தித்தாள்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். ஆக்சிஜன் ஒதுக்கீடு விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு மக்களின் உயிரை உச்ச நீதிமன்றம் காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.

Image Source : www.barandbench.com

இந்தியாவில் கொரோனா பரவலை குறைப்பதிலும், மரணங்களை தடுப்பதிலும் உச்ச நீதிமன்றத்தின் பங்கை உணர்கிறேன். முக்கியமாக டெல்லியில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி நீதிபதிகளே.. நான் மிகவும் பெருமையாகவும், மகிழ்வாகவும் உணர்கிறேன், என்று லிட்வினா ஜோசப் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கடித்ததோடு லிட்வினா ஜோசப் அழகான நீதிபதி ஓவியம் ஒன்றையும் வரைந்து அனுப்பி இருந்தார். இந்த நிலையில் தலைமை நீதிபதி என்வி ரமணா இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், இந்த வயதில், தினசரி செய்திகளையும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் தொடர்ந்து பின்பற்றுவது எனக்கு வியப்பு அளிக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களின் நல்வாழ்க்கை குறித்து உன்னுடைய கவலை வியப்பளிக்கிறது, நீ நல்ல அறிவார்ந்த குடிமகளாக வளர்ந்து இந்த நாட்டிற்கு பங்களிப்பாய் என்று நம்புகிறேன், என்று தலைமை நீதிபதி பதில் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+