SETC பேருந்துகளில் ‘ஸ்பெஷல் ஆஃபர்’.. 5 முறைக்கு மேல் பயணம் செய்தால் 50% சலுகை.. அமைச்சர் அறிவிப்பு!
சென்னை : அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத் துறையின் சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஸ்பெஷல் ஆஃபர்
போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, சிறப்பு ஆஃபர் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஒரே மாதத்தில் 6வது முறையாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ பயணம் செய்யும்போது பயணக் கட்டணத்தில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு
மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் போதுமான அளவில் இல்லாததால் பெண்கள் தனியாக பயணம் செய்ய தயங்குகின்றனர் என்று தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், பெண்களுக்கு பிரத்யேகமாக அதிக இருக்கையில் வழங்கப்பட்டால் அவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயமின்றி நம்பிக்கையுடன் பயணிக்க விரும்புவார்கள் என்றார்.

ஸ்பெஷல் இருக்கை
எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு என தனியாக நான்கு இருக்கைகள் ஒதுக்கப்படும், என்றும் பயண நேரத்திற்கு 24 மணி நேரம் முன்பு வரை இணையதளத்தில் முன்பதிவில் பெண் பயணிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கும் என்றும் அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். மேலும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்துவதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

பெண்களுக்கு மாதந்தோறும் சேமிப்பு
மேலும், கட்டணமில்லா பேருந்துகளில் கடந்த 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் மாதந்தோறும் ரூ.1,500 வரை சேமிக்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications