அண்ணே கீழே பணம் பாருங்க.. என்னது பணமா.. வண்டியை விட்டு இறங்கிய பூமிநாதன்.. ரூ. 50,000 அவுட்!
நபரை திசை திருப்பி ரூ.50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வெறும் 10 ரூபாய் நோட்டை ரோட்டில போட்டுட்டு ஆள் அசந்த நேரத்தில 50,000 ரூபாயை அபேஸ் பண்ண ஆசாமியைதான் திருவான்மியூர் போலீசார் தேடி வருகிறார்கள்.
கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய வேலையே தண்டலுக்கு பணம் கொடுப்பதுதான்.
நேற்று இவர் தனது சைக்கிளில் திருவான்மியூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். தன் கணக்கில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு அப்படியே மார்க்கெட் பக்கம் போனார். வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கீழே பணம் இருக்கு
கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள புத்து கன்னியம்மன் கோவில் அருகே வரும்போது, பூமிநாதன் பின்னாலேயே ஒருத்தர் வந்தார். அப்போது, பூமிநாதனிடம், "ஏங்க.. உங்க பணம் கீழே விழுந்துருச்சி பாருங்கள் என்றார்.

10 ரூபாய் நோட்டு
கீழே பணமா? என நினைத்து பூமிநாதன் சைக்கிளை விட்டு இறங்கினார். அப்போது, ரோடில் 10 ரூபாய் நோட்டுகள் இருந்தது. சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த பணத்தை எடுத்தார். அந்த நேரம் பார்த்து, பின்னால் வந்த நபர் பூமிநாதனிடம் இருந்து பண பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் பறந்தார்.

சிசிடிவி கேமரா
பேங்க்-கில் இருந்து எடுத்த பணம் 50 ஆயிரம் தவிர பாஸ்புக்கும் அந்த பையில்தான் இருந்தது. இதனால் அதிர்ச்சியிடைந்த பூமிநாதன் திருவான்மியூர் போலீசில் புகார் தந்துள்ளார். இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணையை ஆரம்பித்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு நடத்தினார்கள்.

50 ஆயிரம் அபேஸ்
அப்போது, பூமிநாதனிடம் இருந்து பணப்பையை பிடுங்கி கொண்டு பைக்கில் அந்த நபர் ஏறி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அவர் யார் என தெரியவில்லை. 10 ரூபாயை போட்டு 50 ஆயிரம் அபேஸ் செய்த அந்நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications