சென்னையில் இன்று திருவிழா மாதிரி.. காணும் பொங்கலையொட்டி கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள்!
சென்னை: சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெரினா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். போகி தொடங்கி, பொங்கல், மாட்டுப் பொங்கல் என தொடர்ந்து, நான்காம் நாளில் நிறைவாக கொண்டாடப்படும் திருநாள் தான் காணும் பொங்கல். தமிழகத்தில் மிகவும் சிறப்புக்குரியதாக காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.

காணும் பொங்கல் அன்று, உறவினர்கள், நண்பர்கள் உடன் சந்திப்பு மேற்கொண்டு அளவளாவி மகிழ்வது வழக்கம். சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ளவர்கள் கடற்கரை, மால், தியேட்டர், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றிற்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்து விட்டு வருவார்கள். கிராமங்களில், வீட்டில் பல விதமான உணவுகளை சமைத்து எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று, அங்கு நீர் நிலைகளை வழிபட்டு, நண்பர்கள், உறவினர்களுடன் உணவுகளை பகிர்ந்து, விளையாடி மகிழ்வார்கள்.
காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இதனையொட்டி சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி கடற்கரையில் இருந்து கடலுக்கு செல்ல முடியாதபடி 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை முழுவதும் 16 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னைக்குள் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காணும் பொங்கலையொட்டி சென்னையில் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்கள். இதற்கு ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாமல்லபுரம், கோவளம், எம்ஜிஎம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் விளையாட்டு பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகளை பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி, இறக்கவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள், பரிசோதகர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications