Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மாஸ்” காட்டிய செந்தில் பாலாஜி.. தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மூடப்படும்! சட்டசபையில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறிந்து மூடுவோம் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த துறைகளின் அமைச்சர் செந்தில் பாலாஜி துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் குறிப்பாக பெரும்பான்மையான மக்களை ஈர்த்து இருப்பது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்புதான்.

தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், அவரது இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் அரசுக்கு இதனால் நற்பெயர் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

500 Tasmac shops should be closed in Tamilnadu - Minister Senthil Balaji

தமிழ்நாடு சட்டசபையில் இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில், "தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறியப்பட்டு மூடுப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்படும். டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100 தொகுப்பூதியம், விற்பனையாளர்களுக்கு ரூ.930 தொகுப்பூதியம் உயர்த்தி தரப்படும்.

அதேபோல் டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840 தொகுதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம் வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.31.57 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்காக நிதி உதவி வழங்கப்படும். மது அருந்துவதற்கு அடிமை ஆகாமல் இருக்கவும் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, போதை மருந்துகளை தவறான வகையில் பயன்படுத்துவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரகசிய தகவலாளர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி தரப்படும். எரி சாராயம், போலி மதுபானம், பிற மாநிலங்களில் கடத்தப்படும் மதுபாட்டில்களை கைப்பற்ற பெரும்பங்கு வகிக்கும் காவல் ஆளுநர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகையை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சமாக உயர்த்தி தரப்படும்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+