“மாஸ்” காட்டிய செந்தில் பாலாஜி.. தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மூடப்படும்! சட்டசபையில் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறிந்து மூடுவோம் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த துறைகளின் அமைச்சர் செந்தில் பாலாஜி துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் குறிப்பாக பெரும்பான்மையான மக்களை ஈர்த்து இருப்பது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்புதான்.
தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், அவரது இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் அரசுக்கு இதனால் நற்பெயர் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில், "தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறியப்பட்டு மூடுப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்படும். டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100 தொகுப்பூதியம், விற்பனையாளர்களுக்கு ரூ.930 தொகுப்பூதியம் உயர்த்தி தரப்படும்.
அதேபோல் டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840 தொகுதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம் வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.31.57 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்காக நிதி உதவி வழங்கப்படும். மது அருந்துவதற்கு அடிமை ஆகாமல் இருக்கவும் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, போதை மருந்துகளை தவறான வகையில் பயன்படுத்துவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரகசிய தகவலாளர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி தரப்படும். எரி சாராயம், போலி மதுபானம், பிற மாநிலங்களில் கடத்தப்படும் மதுபாட்டில்களை கைப்பற்ற பெரும்பங்கு வகிக்கும் காவல் ஆளுநர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகையை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சமாக உயர்த்தி தரப்படும்." என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications