தமிழகத்தில் மேலும் 514 பேருக்கு கொரோனா உறுதி.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை ரொம்ப அதிகம்!
சென்னை: தமிழகத்தில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,39,866 பேராகும்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பரவிய கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல பாதிப்பு குறைந்து பாதிப்பு எண்ணிக்கை 5 இலக்கத்திலிருந்து 3 இலக்கத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை இன்றைய தினம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இன்று 514 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 8,39,866 பேராகும். இன்று ஒரே நாளில் 53,649 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,61,76,919 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.
அது போல் இன்று ஒரே நாளில் 53,471 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,58,65,023 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 314 ஆண்களுக்கும் 200 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 254 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 533 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதுவரை 8,23,001 பேர் வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 4,494 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று ஒரே நாளில் 4 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை கொரோனாவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 12,371 பேராகும். இன்று சென்னையில் மட்டும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் ஒருவருக்கு செங்கையில் 25 பேருக்கும், கோவையில் 74 பேருக்கும், கடலூரில் 6 பேருக்கும் திண்டுக்கல்லில் 3 பேருக்கும் ஈரோட்டில் 17 பேருக்கும் நாமக்கல்லில் 9 பேருக்கும் திருவள்ளூரில் 34 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா, கொரோனா தடுப்பு.. மோடியை ராஜ்யசபாவில் புகழ்ந்து தள்ளிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்
சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,31,711 பேராகும். அரியலூரில் 4,697 பேருக்கும் செங்கல்பட்டில் 51,641 பேருக்கும், கோவையில் 54,575 பேருக்கும், கடலூரில் 24,948 பேருக்கும், தருமபுரியில் 6594 பேருக்கும் காஞ்சியில் 29,288 பேருக்கும் திருவள்ளூரில் 43,626 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.