கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி புலனாய்வு குழுவில் மேலும் 56 போலீஸார் சேர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி புலனாய்வு குழுவில் மேலும் 56 போலீஸார் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 17 வயது சிறுமி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

56 more police were included in Kallakurichi student investigating team

இதையடுத்து மாணவி இறப்புக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 17 ஆம் தேதி கலவரம் மூண்டது. இதில் அந்த பள்ளியின் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் மாணவியின் மரணத்திற்கு சிலர் அழைப்பு விடுத்து போராட்டம் நடத்த ஆட்களை சேர்த்ததாக தெரிகிறது. இதை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபினவ் தலைமையில் சிபிசிஐடி புலனாய்வு குழு கடந்த 19ஆம் தேதி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நியமித்தார். அதில் 5 காவல் துறை உயரதிகாரிகள், 6 டிஎஸ்பிக்கள், 9 காவல் துறை ஆய்வாளர்கள், 3 சைபர் கிரைம் போலீஸார் இடம்பெற்றுள்ளார்கள்.

Recommended Video

    Kallakurichi மாணவி மரணத்தில் நீடிக்கும் மர்மம் *TamilNadu

    இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்ஐக்கள், தலைமைக் காவலர்கள் என மேலும் 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+