600 ஏக்கர் நிலம் அபகரிப்பு.. திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்.. செங்கல்பட்டில் பரபரப்பு
சென்னை: முழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு 600 ஏக்கர் விவசாய நிலங்களை, திமுக அரசு அபகரிக்க முயல்வதாக கூறி, அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. செங்கல்பட்டு அடுத்த பதுவஞ்சேரியில் இந்த ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்த உள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக அரசை தொடர்ந்து விமர்சித்தும், குற்றஞ்சாட்டியும் வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. அந்தவகையில், கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், "செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் சுமார் 520 ஏக்கர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் சுமார் 22 ஏக்கர், மதுரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கோயிலாஞ்சேரி கிராமத்தில் சுமார் 58 ஏக்கர் என மொத்தம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை சிஎம்டிஏ மூலமாக திமுக அரசு கையகப்படுத்த முயற்சிக்கிறது.
நில அபகரிப்பு: இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 14-ம் தேதியிட்ட செங்கல்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், காலம் காலமாக விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளின் நிலங்களை அபகரித்து 40 சதவீத நிலத்தில் சாலைகள், பூங்காக்கள், பள்ளிகள் போன்றவற்றை மேம்படுத்தி, 60 சதவீத நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
எந்த அடிப்படையில் திருப்பித் தருவீர்கள் என்று அதிகாரிகளிடத்தில் விசாரித்தபோது, அவர்கள் சரியான பதில்தர மறுக்கிறார்கள். மேலும், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக அவர்களுடைய விவசாய நிலங்கள் திகழ்கின்றன.
ஆர்ப்பாட்டம்: விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்கப்படுத்துவதற்குப் பதில், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் எண்ணத்துடன், முழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு விவசாய நிலங்களை திமுக அரசு அபகரிக்க முயல்கிறது. இதைக் கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் நவ.19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
பதுவஞ்சேரி-மப்பேடு சந்திப்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.
செங்கல்பட்டு: இதில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, செங்கல்பட்டில் இன்றைய ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்துகிறது.
-
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications