சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 7,987 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பும் அதிகரிப்பு.. 3 மாவட்டம் மிக மோசம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: இன்று ஒரே நாளில் 17 பேர் பலி!

    தமிழகம் முழுவதும் இந்த முறை முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பில் இரண்டாயிரம், ஐந்தாயிரத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 8,000-ஐ நெருங்கி விட்டது.

    குவியும் உடல்கள்.. அமரர் ஊர்தி தட்டுப்பாடு.. லாரியில் ஏற்றிசெல்லப்படும் உடல்கள்.. சத்தீஸ்கரில் அவலம்குவியும் உடல்கள்.. அமரர் ஊர்தி தட்டுப்பாடு.. லாரியில் ஏற்றிசெல்லப்படும் உடல்கள்.. சத்தீஸ்கரில் அவலம்

    8,000-ஐ நெருங்கிய பாதிப்பு

    8,000-ஐ நெருங்கிய பாதிப்பு

    கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது.

    29 பேர் உயிரிழப்பு

    29 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,999 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 4,176 பேர் குணமடைந்துள்ளனர்.

    சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?

    சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?

    இதுவரை மொத்தம் 8,91,839 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 58,097 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 93,995 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,05,44,549 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு

    செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு

    கோவை, செங்கல்பட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 2,558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 685 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 534 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 203 பேருக்கும், மதுரையில் 234 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 473 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    English summary
    In Tamil Nadu, 7,987 people have been diagnosed with corona in a single day today. Another 29 people were killed in the corona
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X