Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்போரூர் கோயிலுக்கு சொந்தமான 700 கோடி நிலம்.. 100 ஆண்டுகளுக்கு பின் அதிரடியாக மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 21ம் தேதி பிறப்பித்த உத்தரவில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறைக்குக் கெடு விதித்துள்ளது. இதையடுத்து திருப்போரூரில் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 700 கோடி மதிப்புள்ள 240 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் 100 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோவில் திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 550 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் மதிப்பு பல 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இவை சுமார் 100 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தது.

700 crore worth of land belonging to the Thiruporur temple recovered after 100 years

அந்த குறிப்பிட்ட நிலங்களை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெகநாத் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்பதால், ஜெகநாத் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமனற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு கடந்த ஜனவரி 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை தரப்பில், 'கோவிலுக்கு சொந்தமான 125 ஏக்கர் நிலத்தை 233 பேர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் வாடகை செலுத்த முன்வந்திருக்கிறார்கள். அதனால், ஆக்கிரமிப்புகளை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.

அரசின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 'வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை எப்படி வரன்முறை செய்ய முடியும்? 2 ஆண்டுகளுக்குக்கும் மேலாக ஆக்கிரமிப்புகளை மீட்டு அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?' என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர், 3 வாரத்தில் ஆக்கிரமிப்புகளை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். அடுத்த வாரம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது அரசின் வருவாய் துறை தரப்பும், அறநிலையத்துறை தரப்பும் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தே ஆக வேண்டும் என்று கெடு உள்ளது.

இந்த சூழலில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, 27 அரசு அதிகாரிகள், 49 தொழிலதிபர்கள் மற்றும் 38 செல்வாக்கு மிக்க நபர்கள் இந்த கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனிடையே திருப்போரூரில் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 700 கோடி மதிப்புள்ள 240 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் 100 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அதிரடியாக மீட்கப்பட்டது. அங்கு திருப்போரூரில் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் என்றும் ஆக்கிரமிக்க முயன்றால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+