வந்துருச்சு தீபாவளி.. கிளம்பு கிளம்பு.. வெளியூர் செல்ல 2 நாளில் 7187 பேர் பஸ்களுக்கு முன்பதிவு
தீபாவளிக்காக சிறப்பு பஸ்களில் முன்பதிவுகள் விரைவாக நடந்து வருகிறது.
சென்னை: தீபாவளிக்கு பண்டிகைக்கு வெளியூர் செல்வதற்காக, சிறப்பு கவுன்டர்கள் மூலம், கடந்த 2 நாளில் மட்டும் 7,187 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், படிக்கும் மாணவர்கள், என அனைவருமே தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகையை ஒட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

சிறப்பு கவுண்டர்கள்
அதன்படி சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து, வருகிற 3, 4, 5ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் 11,367 பஸ்களும் மற்ற நகரங்களில் இருந்து 9,200 பஸ்களும் இயக்கப்படும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு கவுன்டர்கள் ஏற்கனவே திறக்கப்பட்டன.
[தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தயாராகுறீங்களா... அரசின் இந்த அறிவுறுத்தல்களை கொஞ்சம் பாருங்க!]

ஆன்லைன் புக்கிங்
இதை தவிர, கோயம்பேடு உள்ளிட்ட 4 இடங்களில் மேலும் 30 சிறப்பு கவுன்டர்கள் கடந்தபுதன் கிழமை திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட 2 நாளில் அதாவது புதன், வியாழன் என இரு தினங்களில் மட்டும் இதை தவிர ஆன்லைன் புக்கிங்கூட உண்டு.

வேகமான புக்கிங்
சென்னையில், ஏற்கனவே உள்ள கவுன்டர்கள் நீங்கலாக, கோயம்பேடு உட்பட 4 இடங்களில் மொத்தம் 30 சிறப்பு கவுன்டர்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இதில் கடந்த 2 தினங்களில் மட்டும் 7 ஆயிரத்து 187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும்கூட பயணிகள் புக்கிங் செய்து வருகிறார்கள்.

சிறப்பு பஸ்கள்
இதற்காக முன்பதிவு டிக்கெட் வழங்க அதிக அளவு ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மீண்டும் சிறப்பு பஸ்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதாவது 7,8,9 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications