Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் தொடர் மழை.. 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் மழையால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    கனமழை எதிரொலி... 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென் மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

    8 districts schools were declared as holiday ahead of heavy rains

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகருவதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த மூன்று நாட்களில் மேற்கு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.

    இதனால் நாகை, திருச்சி, நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று காலையும் மழை தொடர்ந்ததால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், புதுக்கோட்டை, நெல்லை, திருவாரூர், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்திலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்றைய தினம் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+