தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 811 பேருக்கு கொரோனா.. சென்னையில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் மேலும் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், தினமும் மாலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மேலும் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,23,181 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 943 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 8,03,328 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 12,188 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 228 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,26,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,45,66,511 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 63,582 மாதிரிகளை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 242 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பிலான மையங்கள் எண்ணிக்கை 68 ஆகும். தனியார் மையங்கள் 174 என்ற அளவில் உள்ளன.












Click it and Unblock the Notifications