தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஆளுநர் மாளிகை விளக்கம்
சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் மாளிகை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ளது. பல 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் உள்ள ராஜ் பவனில் ஒரு சில நபர்களுக்கு அறிகுறிகள் காட்டியதைடுத்து வளாகத்தில் பணிபுரிந்த 147 நபர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதுகாவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும். ராஜ் பவன் கட்டிடத்திற்கு வெளியே பணிபுரிந்து வந்தனர். இந்த நபர்கள் யாரும் ஆளுநர் அல்லது ராஜ் பவனின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை, "என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அலுவலகங்கள் உட்பட முழுப் பகுதியும் மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications