ஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்?
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 191754 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,94,030 பேராகும். அண்மைக்காலங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.
மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை பார்த்தோமேயானால் சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இன்று ஒரே நாளில் 1,235 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்கள்.
சென்னையில் இன்று 11 பேர் உயிரிழந்தனர். அரியலூரில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 191 பேருக்கும், கோவையில் 263 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 93 பேருக்கும் நாமக்கல்லில் 95 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி
சேலத்தில் 169 பேருக்கும் திருவள்ளூரில் 137 பேருக்கும், திருப்பூருக்கும் 125 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 191754 பேருக்கும் கோவையில் 40374 பேருக்கும் செங்கல்பட்டில் 41645 பேருக்கும் கன்னியாகுமரியில் 14422 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.