விஜய் கையில் அந்த ரிப்போர்ட்.. தலையிலடித்து கொள்ளும் 4 அதிமுக எம்எல்ஏக்கள்? அங்கே என்னாகுமோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏன் தான் அதிமுகவை விட்டுவிட்டு வந்தோம்? என்று 4 எம்எல்ஏக்களும் நொந்து போய் கிடக்கிறார்களாம்.. நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடுவதா அல்லது ரிஸ்க் எடுத்து சீட் தருவதா என்ற தர்மசங்கடத்தில் தவெக தலைமை கையை பிசைந்து கொண்டிருக்கிறதாம்.. இப்படி தவெக, திமுக என 2 கட்சிகளுக்குள் பரபரப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. என்னதான் நடக்கிறது?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் சமீபத்தில் ஒரு தனி அணியே உருவானது.

Vijay AIADMK TVK Tamil Nadu Politics Survey Report Political News h

25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடியின் கொறடா உத்தரவை மீறி இந்த அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து ஒட்டுமொத்த அரசியலையும் கவனிக்க வைத்தனர்.. இதனால் செம கோபமடைந்த எடப்பாடி தரப்பு, அவர்கள் எல்லாரையுமே தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் உடனடியாக மனு கொடுத்தது.

இதற்கு நடுவே பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமானார்கள். மற்ற 21 எம்.எல்.ஏ.க்களும் நீண்ட இழுபறிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை அ.தி.மு.க தலைமை திரும்பப் பெற்றது. இருந்தாலும் சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு எடப்பாடி மீதான அதிருப்தி கொஞ்சமும் குறையவில்லை..

4 அதிமுக எம்எல்ஏக்கள்

இப்போதைக்கு தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் நீங்கலாக த.வெ.கவிற்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களுடன் காங்கிரஸ் 5, வி.சி.க 2, கம்யூனிஸ்ட் கட்சிகள் 4, முஸ்லிம் லீக் 2 என மொத்தம் 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் இந்த கூட்டணிக் கட்சிகள் கடைசி வரை தங்களோடு பயணிக்குமா என்பதில் விஜய்க்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்றே கூறப்படுகிறது. அதனால்தான் அதிமுக அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்க த.வெ.க மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது, "பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும், தொகுதியில் எடுக்கப்படும் சீக்ரெட் சர்வே அடிப்படையில் மட்டுமே மீண்டும் சீட் வழங்கப்படும்" என்பதில் முதல்வர் விஜய் ஆரம்பத்திலிருந்தே கறாராக உள்ளாராம்.

விஜய் கையில் அந்த ரிப்போர்ட்

ஆனால் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக பிரமுகர்கள், அதிமுக எம்எல்ஏக்களிடம், இஷ்டத்துக்கு பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களாம். அவைகளை அப்படியே நம்பிய அந்த 4 பேரும் தங்களது பதவிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளனர்.

இப்போது அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், தவெக தலைமை சர்வே ஒன்று எடுத்துள்ளது.. அதில் ராஜினாமா செய்த 4 பேருக்குமே அந்தந்த தொகுதிகளில் பொதுமக்களிடம் நல்ல பெயர் இல்லை என்பதும், மீண்டும் அவர்களுக்கே சீட் கொடுத்தால் தவெக கண்டிப்பாக தோற்றுவிடும் என்றும் ஷாக்கிங் ரிப்போர்ட் வந்துள்ளதாம்.. இதனால் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க விஜய் முற்றிலும் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

அடுத்து என்னாகுமோ

அதற்காக, தங்களை நம்பி வந்தவர்களை அப்படியே கைவிடவும் விஜய் விரும்பவில்லையாம்.. அதற்குப் பதிலாக, வாரியத் தலைவர் பதவிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளுமாறு அவர்களுக்கு தவெக தலைமை தூது அனுப்பியுள்ளது.

இதனை கொஞ்சமும் எதிர்பாராத ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட நால்வரும் தங்களை அழைத்து வந்த தவெக அமைச்சர்களிடம், "எங்களை ஏமாற்றிவிட்டீர்களே" என புலம்புகிறார்களாம்... அடுத்து என்ன நடக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+